காப்பகத்திலிருந்த வடமாநில சிறுவர்கள்கழிவறை ஜன்னல் கம்பிகளை வளைத்து தப்பி ஓட்டம்

x

சென்னை கொடுங்கையூர் பகுதியில் தொன் போஸ்கோ அன்பு இல்லம் இயங்கி வருகிறது. இந்த இல்லத்தில் ரயில்வே தண்டவாளம் பகுதியில் சுற்றி திரிந்த மூன்று ஜார்கண்ட் மாநில சிறுவர்களை, குழந்தைகள் நல கமிட்டியினர் சேர்த்துள்ளனர். இந்தநிலையில் 3 சிறுவர்களும் காப்பக கழிவறை ஜன்னல் கம்பிகளை வளைத்து தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து காப்பகத்தின் குழந்தைகள் பராமரிப்பு அலுவலர் அளித்த புகாரின் பேரில், தப்பி ஓடிய சிறுவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்