ஒரே நைட்டில் கோடீஸ்வரரான வடமாநில தொழிலாளி.. பாதுகாப்பு கேட்டு போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம்

x

தம்பனூர் காவல் நிலையத்திற்கு வட மாநில தொழிலாளர்கள் கும்பலாக ஓடி வந்தனர். பின்னர் போலீசாரை கண்டதும் காலில் விழுந்து கதறி உள்ளனர். பதறிய போலீசார், அழுவதற்கான காரணம் கேட்ட போது, ஒரு கோடி பரிசு விழுந்துள்ளதாக கூறியுள்ளனர். நண்பர்கள் சிலரால் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என அச்சமாக உள்ளதாக கூறிய வட மாநில தொழிலாளி, பாதுகாப்பு தர வேண்டும் என கோரியுள்ளார். இதனையடுத்து பரிசு விழுந்த சீட்டை வங்கியில் டெபாசிட் செய்வது உள்பட பல வழிமுறைகளை போலீசார் தெரிவித்தனர். பின்னர், பரிசு சீட்டுடன் வட மாநில தொழிலாளியும், போலீசாரும் குழு புகைப்படம் எடுத்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்