கிரஸர் இயந்திரத்தில் சிக்கி வடமாநில தொழிலாளி உயிரிழப்பு

x

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே அய்யர்மலை கல்குவாரியில் கிரஸர் இயந்திரத்தில் சிக்கி வடமாநில தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். தனியார் ஜல்லி உடைக்கும் கிரசரில் தங்கி பணியாற்றி வருகிறார் அசாம் மாநிலத்தை சேர்ந்த காதேஸ்வர்போரோ. இவர் கிரஸர் இயந்திரத்தை துடைக்கும் எதிர்பாராத விதமாக பெல்டில் சிக்கிய இடது கையை இழுக்கும் போது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அங்கிருந்தவர்கள் உயிரிழந்தவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவரின் உறவினர் அளித்த புகாரில் சூப்பரவைசர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்