இளம் பெண்களை துரத்திய வடமாநில கும்பல்..மரத்தில் கட்டி வெளுத்தெடுத்த மக்கள் - பரபரப்பு காட்சிகள்

x

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே இளம்பெண்களை விரட்டி சென்றதாக 3 வடமாநில இளைஞர்களை பிடித்து மரத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர். இளம்பெண்களின் அலறல் சப்தம் கேட்டு ஒடிவந்த ஊர்மக்கள், மூன்று இளைஞர்களை விரட்டி பிடித்து மரத்தில் கட்டி வைத்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வடமாநில இளைஞர்களை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்