வட மாநிலத்தவர்களை தாக்குவது போன்ற வீடியோக்கள்... அதிகாரிகளை தொடர்பு கொண்ட பீகார் முதல்வர் - அதிரடியாக வீடியோ வெளியிட்ட தமிழக டிஜிபி

x
  • தமிழகத்துக்கு வேலைக்கு வந்துள்ள பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்று 2 வீடியோக்கள் அண்மையில் சமூக வலைத்தளங்களில் பரவின.
  • இதுகுறித்து கவலை தெரிவித்த பீகார் முதல்வர் நிதீஷ் குமார், தமிழ்நாட்டில் உள்ள அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, தங்கள் மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பீகார் அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
  • இதுதொடர்பாக, தமிழக காவல் துறை டிஜிபி சைலேந்திர பாபு டிவிட்டரில் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.
  • அதில், சமூக வலைத்தளங்களில் வெளியான அந்த 2 வீடியோக்களும் ஏற்கனவே நடந்த இரு வேறு சம்பவங்களை திரித்து வெளியிடப்பட்டவை என்று கூறியுள்ளார்.
  • தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்