வடமாநிலத் தொழிலாளர்கள் குறித்து வதந்தி... பாஜக நிர்வாகிக்கு எதிராக வழக்குகள் பதிவு

• வடமாநிலத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக வதந்தி பரப்பியதாக பாஜக நிர்வாகிக்கு எதிரான வழக்குகளின் விவரங்களை தெரிவிக்க காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒரு வாரம் அவகாசம் வழங்கி உள்ளது. • உத்தரபிரதேசத்தை சேர்ந்த பிரசாந்த் குமார் உம்ராவ் மீது தூத்துக்குடி, திருப்பூர் மாவட்டங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. • தூத்துக்குடி வழக்கில் முன்ஜாமின் பெற்றுள்ள அவர், திருப்பூர் வழக்கில் முன்ஜாமின் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். • இந்ந மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், உம்ராவ் மீதான வழக்குகளின் விவரங்களை அளிக்க காவல் துறைக்கு ஒரு வாரம் அவகாசம் வழங்கியுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com