நடைபெறாத இ- வாகன பதிவுகள்... அரசு நடவடிக்கை எடுக்குமா?

x

தமிழகத்தில் இ-வாகனங்களுக்கான பதிவுகள் நடைபெறவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

இ- வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், மானியம் மற்றும் 100 விழுக்காடு போக்குவரத்து வரி விலக்கு வழங்கப்படுகிறது.

இதற்காக வெளியிடப்பட்ட அரசாணை டிசம்பர் மாத‌த்துடன் முடிவடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து, அரசாணையை 2025 ஆம் ஆண்டு இறுதி வரை நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

ஆனால், இந்த அரசாணை குறித்த உத்தரவு வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு கிடைக்காத‌தால், ஜனவரி ஒன்றாம் தேதியிலிருந்து, இரு சக்கர மற்றும் நான்கு சக்கர இ-வாகனங்களுக்கு பதிவுகள் மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்