கர்நாடகாவில் வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது..!

x

கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தல், மே மாதம் 10-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 13-ஆம் தேதி தொடங்கி, இன்றுடன் நிறைவு பெறுகிறது. நேற்று மாலை நிலவரப்படி, மொத்தம் ஆயிரத்து 110 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. பாஜக தரப்பில் 164 பேரும், காங்கிரஸில் 147, மதசார்பற்ற ஜனதாதன கட்சியைச் சேர்ந்த 104 பேரும் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இவர்களைத் தவிர சுயேச்சையாக 359 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். மீதமுள்ள தொகுதிகளில் வேட்பாளர்கள், இன்று வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளனர். அனைத்து வேட்புமனுக்களும் நாளை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்