சமைக்கும் போது கேட்ட உஷ்..உஷ்.. சத்தம் - கேஸ் சிலிண்டர் பின் பதுங்கிய பாம்பு

x

குன்னூர் அருகே குடியிருப்பில் புகுந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் லாவகமாக மீட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் வெள்ளாளபுரம் பகுதியில் உள்ள சீதாலட்சுமி என்பவரின் வீட்டிற்குள் பாம்பு புகுந்ததாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், சமையலறையில் கேஸ் சிலிண்டர் பின் பதுங்கி இருந்த பாம்பை லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்