ஒரு ஆடைக்கு அக்கப்போரு... கடை உரிமையாளருக்கு கட்டையால் அடி - அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

x

நொய்டாவில் ஆடையை மாற்ற மறுத்த கடை உரிமையாளரை கட்டையால் தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. நொய்டாவில் உள்ள கடைக்கு 2 மாதங்களுக்கு முன்பு சென்ற பெண் ஒருவர் சட்டை வாங்கியுள்ளார். தற்போது அதை மாற்றி கொள்ளும்படி கடை உரிமையாளரிடம் அந்த பெண் கேட்டுள்ளார். அதற்கு கடை உரிமையாளர் மறுத்ததால், தனது கணவரான ராஜ்நீஷிடம் முறையிட்டுள்ளார். அதனால் ஆத்திரமடைந்த ராஜ்நீஷ், கடை உரிமையாளர் நந்தாவை கட்டையால் பலமாக தாக்கினார். அதன் சிசிடிவி காட்சி வெளியானதும், ஒருவரை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்