அறிவியல் ஆசிரியர் இல்லை - மாணவர்கள் பள்ளியை புறக்கணித்து போராட்டம்
திருவள்ளூர் மாவட்டம் கேசவராஜ்குப்பம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியினர் பயின்று வருகின்றனர். இந்நிலையில் அறிவியல் ஆசிரியர் இல்லாததால் கல்வித்திறன் பாதிக்கப்படுவதாக கூறி, வகுப்புகளை புறக்கணித்து மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் பெற்றோரிடம் தலைமையாசிரியர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், போராட்டத்தை கைவிட்டு மாணவர்கள் வகுப்பறைக்கு சென்றனர்.
Next Story