"யார் என்ன சொன்னாலும்.. சொந்தமும் பந்தமும் வீட்ட உடைக்கும்" - உறவினர் அட்டூழியம் செய்த காட்சிகள்

x

திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூரில், நில பிரச்னை தொடர்பாக, உறவினர் வீட்டு சுற்றுச்சுவரை இடிக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. தச்சநல்லூரைச் சேர்ந்த அருணாச்சலம், அவரது சகோதரர் மகன் முத்துக்குமார் ஆகியோருக்கு இடையே நில பிரச்னை இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, தனது 10 சென்ட் இடத்துக்கு பாதை கேட்டு தகராறு செய்து வந்த முத்துக்குமார், தாளையூத்து பகுதியைச் சேர்ந்த இருவருடன் இணைந்து அருணாச்சலத்தின் வீட்டு சுற்றுச்சுவரை இடித்துச் சென்றார். இது குறித்த புகாரின் பேரில், முத்துக்குமார் உள்பட இருவரை தச்சநல்லூர் போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்