இனி நீட்டிக்க வாய்ப்பு இல்லை.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

x

பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.

பொறியியல் படிப்புகளில் சேர மே மாதம் 5ஆம் தேதி முதல் ஆன்லைன் வாயிலாக மாணவர்கள் பதிவு செய்து வருகின்றனர். நேற்று மாலை நிலவரப்படி இரண்டு லட்சத்து 20 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். இதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. கால அவகாசம் நீட்டிப்பதற்கு வாய்ப்பு இல்லை என உயர் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்திருப்பதால், இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் இன்றுக்குள் விண்ணப்பிக்கலாம் என, குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்