"பரந்தூர் விமான நிலையம் வேண்டாம்" - கிராமமே நெருப்பில் இறங்கி வேண்டுதல்

x

காஞ்சிபுரம் பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம எல்லையம்மன் கோயிலில் தீமிதித் திருவிழா நடத்தி மக்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். நீர்நிலைகள், விவசாய நிலங்கள் அழிக்கப்படுவதாகக் கூறி கிராம மக்கள் 363 நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், ஆடியை ஒட்டி ஏகனாபுரம் கிராம தேவதையான எல்லையம்மனுக்கு வேண்டுதல் வைத்த மக்கள், விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீ மிதித்து சிறப்பு வழிபாடு நடத்தினர். திருவிழாவில் அமைக்கப்பட்ட அலங்கார ஒளி விளக்குகளில் கூட விமானத்தை அமைத்து தங்கள் எதிர்ப்பினை அப்பகுதி மக்கள் பதிவு செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்