என்எல்சி சுரங்கத்தில் இறங்கிய மக்கள்...பாதுகாப்பு படை பிரிவினரிடம் வாக்குவாதம்

x

என்எல்சி சுரங்கத்தில் இறங்கிய மக்கள்...பாதுகாப்பு படை பிரிவினரிடம் வாக்குவாதம்


கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்எல்சியின் முதலாவது சுரங்கத்திற்குள், மத்திய தொழிலக பாதுகாப்பு படை பிரிவினருக்கும், பொது மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சுரங்கத்தில் மண் வெட்டும் போது, அருகாமையில் உள்ள வடக்கு வெள்ளூர் கிராமத்தில் குடியிருப்பு பகுதியை மண் புழுதி சூழ்ந்தது. இதனால் மூச்சு திணறல் ஏற்பட்ட நிலையில், மண் வெட்டுவதை நிறுத்துமாறு அப்பகுதி மக்கள் சுரங்கத்தில் இறங்கி கூறினர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படையினருக்கும், மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்