விவசாய நிலங்களை கையகப்படுத்த என்எல்சி நிர்வாகம் முயற்சி...கிராம மக்கள் விடுத்த எச்சரிக்கை!

x

நெய்வேலி என்எல்சி சுரங்க விரிவாக்கத்துக்காக கையகப்படுத்தும் நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என, கிராம மக்கள் எச்சரித்தனர்.

நெய்வேலி என்எல்சி நிர்வாகம் தனது சுரங்க விரிவாக்கத்துக்காக, கத்தாழை, ஆதனூர், வளையமாதேவி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களை கையகப்படுத்த முயற்சி எடுத்து வருகிறது. இது தொடர்பாக ஆதனூரில் நடைபெற்ற கூட்டத்தில், 30க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர். அப்போது, கையகப்படுத்தும் நிலங்களுக்கு உரிய இழப்பீடு, நிரந்தர வேலை வழங்க வேண்டும் என, முடிவெடுக்கப்பட்டது. இல்லையெனில், தொடர் போராட்டம் நடத்தப்படும் என, கிராம மக்கள் எச்சரித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்