தீப ஒளியில் மிளிர்ந்த நிஜாமுதீன் தர்கா - சகோதரத்துவத்தை பிரதிபலித்த தர்கா

x

தீப ஒளியில் மிளிர்ந்த நிஜாமுதீன் தர்கா - சகோதரத்துவத்தை பிரதிபலித்த தர்கா

டெல்லியில் உள்ள நிஜாமுதீன் தர்காவில் தீபாவளி கொண்டாட்டப்பட்ட நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாட்டப்பட்ட நிலையில், டெல்லி உள்ள நிஜாமுதீன் தர்காவிலும் தீப ஒளிகள் கண்களை கவர்ந்தன. இந்து - இஸ்லாமியர்களிடையேயான சகோதரத்துவத்தை எடுத்துரைக்கும் விதமாக தர்காவில் தீபங்கள் ஏற்றப்பட்டு, அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இது குறித்து பேசிய தர்கா நிர்வாகம், அமைதியை எடுத்துரைக்கவே தர்காவில் தீப ஒளி ஏற்றப்பட்டதாகவும், இந்து சகோதரர்களின் உதவியால் தீபாவளியை கொண்டாடியதாகவும் நெகிழ்ச்சியுடன் கூறினர்.


Next Story

மேலும் செய்திகள்