திருவாரூரில் `கலைஞர் கோட்டம்' - ஜூன் 20-ம் தேதி திறந்து வைக்கிறார் நிதிஷ் குமார்

x

திருவாரூர் அருகே உள்ள கலைஞர் கோட்டத்தை வரும் ஜூன் 20ஆம் தேதி பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் திறந்து வைக்கிறார்.

காட்டூரில் 7 ஆயிரம் சதுர அடியில் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. இந்த கோட்டத்தில் இரண்டு திருமண மண்டபங்கள், முத்துவேலர் நூலகம் மற்றும் கலைஞரின் முழு உருவ சிலை போன்றவை அமைக்கப்பட்டுள்ளது. மிக பிரம்மாண்டமாக திருவாரூர் தேர் போன்ற வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ள இந்த கலைஞர் கோட்டத்தை வரும் ஜூன் 20ஆம் தேதி பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் திறந்து வைக்கிறார். முத்துவேலர் நூலகத்தை பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார். நிகழ்ச்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்க உள்ளார்..


Next Story

மேலும் செய்திகள்