ரயில் முன்பு பாய்ந்த என்ஐடி மாணவர்.. கடைசியாக நண்பருக்கு வாய்ஸ் மெசேஜ் - திருச்சியில் அதிர்ச்சி

x

திருச்சியில், என்ஐடி மாணவர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவெறும்பூர் அருகே உள்ள கணேஷ்புரம் பகுதியில், ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், அங்கு சென்ற போலீசார், இளைஞரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பான விசாரணையில், தற்கொலை செய்து கொண்ட நபர், திருச்சியை சேர்ந்த அஜய் என்பதும், திருச்சி என்ஐடி கல்லூரியில் எம்.டெக் முதலாம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது. கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து அஜய், திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, தனது நண்பருக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில் தனக்கு வாழ பிடிக்கவில்லை எனக் கூறிவிட்டு, காரைக்கால் நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது. இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், உறவினர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்