சென்னையை உலுக்கிய நிஷாந்த் மரணம்.. அடையாளம் காட்டினர் தாய், தந்தை

x
  • திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை ஏமாற்றிவிட்டார் என இளம்பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்த நிஷாந்த் என்பவருக்கு நடக்கவிருந்த திருமணம் நிறுத்தப்பட்டது.
  • மேலும் நிஷாந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் தலைமறைவான அவர், போரூர் ஏரியில் சடலமாக மீட்கப்பட்டார். நிஷாந்தின் பெற்றோர் மீதும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில் அவர்கள் தலைமறைவாகினர்.
  • இதனால் நிஷாந்தின் உடலை பிரேத பரிசோதனை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது.
  • ஆனால் நிஷாந்தின் பெற்றோர் நேரில் வந்து தங்கள் மகனின் உடலை அடையாளம் காட்டியதை தொடர்ந்து நிஷாந்தின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
  • இதன்பிறகே போலீசாரின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது தெரியவரும்.

Next Story

மேலும் செய்திகள்