தமிழர்களுக்கு விருது வழங்கி கவுரவித்த நிப்பான் பெயிண்ட்ஸ் நிறுவனம்

x

கட்டிட வடிவமைப்பு மற்றும் கட்டிடத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது வழங்கி, நிப்பான் பெயிண்ட்ஸ் நிறுவனம் கவுரவித்தது.

ஜப்பானைச் சேர்ந்த நிப்பான் பெயிண்ட் நிறுவனம் கட்டிடத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி வருகிறது. அந்த வகையில், சென்னையில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில், கட்டிடத்துறையில் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

குறிப்பாக, நிப்பான் பெயிண்ட் நிறங்களை சரியான முறையில் பயன்படுத்தியது, பிரமிக்க வைக்கும் வகையில் நிப்பான் பெயிண்ட்டை பயன்படுத்தியது உள்ளிட்ட 6 பிரிவுகளில் 19 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

தமிழகத்தை சேர்ந்த மோகன்ராஜ், அசோக் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் விருதுகளை பெற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்