துப்பாக்கியால் தன்னை சுட்டு கொண்ட நபர்..மனைவி சென்றதால் விபரீத முடிவு -நீலகிரியில் நடந்த கோர சம்பவம்

x
  • நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே, மனைவி பிரிந்து சென்றதால் விரக்தியடைந்த ஒருவர், நாட்டுத் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • தேவர் சோலை பகுதியைச் சேர்ந்த கண்ணதாசன் என்பவருக்கு சாரதா என்ற பெண்ணுடன் திருமணமான நிலையில், குடும்ப பிரச்னை காரணமாக, மனைவி பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது.
  • இதனால் விரக்தி அடைந்த கண்ணதாசன், வீட்டில் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால், தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், கண்ணதாசனின் உடலை மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
  • இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், துப்பாக்கி எதற்காக வைத்திருந்தார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்