தான் கட்டிய சுவரே கான்ட்ராக்டர் உயிரை பறித்த சோகம்

x
  • நீலகிரி மாவட்டம் உதகை அருகே தடுப்பு சுவர் இடிந்து விழுந்து காண்ட்ராக்டர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • காந்தள் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் தனது உறவினர் வீட்டிற்கு தடுப்பு சுவர் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
  • இவருடன் வடமாநில தொழிலாளர் ஒருவரும் பணியில் ஈடுபட்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக தடுப்புச் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
  • இதில், பலத்த காயமடைந்த இருவரும் மீட்கப்பட்டு உதகை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
  • ஆனால், சந்திரசேகர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலே உயிரிழந்தார்.

Next Story

மேலும் செய்திகள்