15ஆவது நாளாக முகாமிட்டுள்ள காட்டு யானைகள்... யானைகளை விரட்டும் போது குறுக்கே வந்த கரடி

x

நீலகிரி மாவட்டம் குன்னூரில், 15ஆவது நாளாக ஒன்பது காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. காட்டேரி ரன்னிமேடு அருகே, தேயிலை தோட்டத்தில் முகாமிட்டுள்ள யானைகளை விரட்டும் முயற்சியில் வனத்துறை ஈடுபட்டனர். அப்போது, வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கரடி, காட்டு யானைகளை கண்டதும் தேயிலை செடிகளுக்குள் சென்றது. தொடர்ந்து, காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் வராமல் தடுக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்