மதுரையில் ஆட்டோ ஓட்டுநரின் வீட்டில் சோதனை போட்ட பின் அதிர்ந்த NIA

x

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மத்திய அரசால் தடை செய்யப்பட்டது.

இந்த அமைப்புடன் தொடர்புடையவர்களிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், மதுரை நெல்பேட்டை பகுதியில், ஆட்டோ ஓட்டுநர் உமர்ஷெரிப் என்பவரிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அவரது வீட்டில் இருந்த வாள், வேல்கம்பு, கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பின்னர், உமர் ஷெரிப்பை விசாரணைக்காக என்ஐஏ அதிகாரிகள் சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.

ஆட்டோ ஓட்டுனர் உமர், சிலம்பம் உள்ளிட்ட தற்காப்புகலை பயிற்சி வழங்கி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்