இந்தியாவில் அடுத்த 5 நாளைக்கு..வானிலை ஆய்வு மையம் வார்னிங் - இந்த மாநிலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

x
  • அடுத்த ஐந்து நாட்களில், இந்தியாவின் பல மாநிலங்களில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பம் அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
  • அடுத்த சில நாட்களில் இந்தியாவின் பல மாநிலங்களில் வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
  • மேற்கு வங்கத்தில் இன்று முதல் வெப்ப அலை வீசும் என்றும், ஒடிசாவில் நாளை வீசும் என்று கூறியுள்ளது.
  • தற்போது மத்திய பிரதேசத்தின் சில பகுதிகள், குஜராத், மகாராஷ்ட்ராவின் உள் மாவட்டங்கள், ஒடிசா, தெலுங்கானாவில் அதிகபட்ச வெப்பம் 40 முதல் 42 டிகிரி செல்சியஸாக உள்ளது. இதர மாநிலங்களில் 40 டிகிரிக்கும் குறைவாக உள்ளது.
  • ஜம்மு காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் கிழக்கு இந்திய பகுதிகளில் வழக்கத்தை விட 2 முதல் 3 டிகிரி கூடுதல் வெப்பம் பதிவாகியுள்ளது.
  • ஒடிசாவில் வெப்பநிலை அதிகரித்து வருவதால், ஏப்ரல் 16 வரை ஆங்கன்வாடிகள், தனியார் மற்றும் அரசு பள்ளிகளில், பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்