நியூசி- இலங்கை முதல் டி20 போட்டி - சூப்பர் ஓவரில் இலங்கை த்ரில் வெற்றி

x

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில், சூப்பர் ஓவரில் இலங்கை த்ரில் வெற்றி பெற்றது.

ஆக்லாந்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை 5 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது. இலங்கை அணியில் அசலென்கா 67 ரன்களும், குசல் பெரேரா 53 ரன்களும் எடுத்தனர். பின்னர் 197 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணியில், மிட்செல் 66 ரன்கள் எடுத்தார். கடைசி பந்தில் நியூசிலாந்தின் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கடைசி பந்தை இஷ் சோதி சிக்சருக்கு பறக்கவிட்டார். இதனால் ஆட்டம் சமன் ஆன நிலையில், சூப்பர் ஓவர் பின்பற்றப்பட்டது. சூப்பர் ஓவரை இலங்கை பவுலர் தீக்சனா வீச, நியூசிலாந்து 2 விக்கெட் இழப்புக்கு 8 ரன்கள் எடுத்தது. பின்னர் 9 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இலங்கை, 3வது பந்தில் இலக்கை எட்டி த்ரில் வெற்றி பெற்றது.


Next Story

மேலும் செய்திகள்