கொட்டி தீர்த்த கனமழை.. பெருவெள்ளம்... புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்த விமானம்

x

துபாயில் இருந்து நியூசிலாந்து சென்ற எமிரேட்ஸ் விமானம் புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்து தரையிறங்கியுள்ளது.

வெள்ளிக்கிழமை துபாயிலிருந்து புறப்பட்ட விமானம் ஆக்லாந்து விமான நிலையத்தில் தரையிறங்க இருந்தது.

ஆனால் நியூசிலாந்தில் கொட்டி தீர்த்த கனமழையால் விமான நிலையத்தில் வெள்ளம் ஏற்பட்டு மூடப்பட்டது.

தகவல் அறிந்த விமானி உடனடியாக நடுவழியில் விமானத்தை திசைத்திருப்பி துபாய்க்கு இயக்கியுள்ளார். வானில் மொத்தம் 9 ஆயிரம் மைல் தொலைவு பயணம் செய்த விமானம் புறப்பட்ட இடத்திலே தரையிறங்கியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்