புத்தாண்டு கொண்டாட்டம் .. வாண வேடிக்கை பார்க்க மக்களுக்கு நடந்த சொகம்.. உகாண்டாவில் பரபரப்பு

புத்தாண்டு கொண்டாட்டம் .. வாண வேடிக்கை பார்க்க மக்களுக்கு நடந்த சொகம்.. உகாண்டாவில் பரபரப்பு
x

உகாண்டாவின் கம்பாலா பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கம்பாலாவில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.

அப்போது வணிக வளாகத்திற்கு வெளியே வாண வேடிக்கை நிகழ்த்தப்பட்ட நிலையில், அதைக் காண ஒரே நேரத்தில் ஏராளமான மக்கள் முண்டியடித்து வெளியேறினர்...

அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்ட நிலையில், அதில் சிக்கி குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்