வடக்கு நோக்கி நகரும் புதிய புயல்..! - வானிலை ஆய்வு மையம் பரபரப்பு தகவல்

x

மும்பை, தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு 'பிபோர்ஜோய்' என்று பெயரிடப்பட்டுள்ளது. கோவா, மும்பை இடையே நிலைகொண்டுள்ள இந்த புயல் வலுப்பெற்று வடக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, கேரளா முதல் மகாராஷ்டிரா மாநிலம் வரையிலான மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் மழை தீவிரமடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிபோர்ஜோய் புயல் காரணமாக, அரபிக் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும், பலத்த சூறாவளி காற்று வீசும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்