"ரூ.605 கோடி செலவில் புதிய திட்டம்" சபாநாயகர் அப்பாவு பேச்சு

x

நெல்லை மாவட்டம் திசையன்விளை தாலுகா குமாரபுரம் ஊராட்சி அந்தோணியார்புரத்தில் சபாநாயகர் அப்பாவு புதிய ரேஷன் கடையை திறந்து வைத்தார். கொட்டும் மழையில் குடை பிடித்தவாறு புதிய ரேஷன் கடையை திறந்து வைத்த சபாநாயகர் அப்பாவு பொதுமக்களுக்கு அரிசி பைகளை வழங்கினார். பின்னர் பொதுமக்களிடையே பேசிய அவர், 605 கோடி ரூபாய் செலவில் இன்னும் 18 மாதத்தில் அனைத்து கிராமங்களிலும் குடிசை வீடு முதல் கோபுர மாளிகை வரை சமமாக குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்