பதஞ்சலி நிறுவனத்தின் புதிய முடிவு..12 மாநில அரசுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

x

சமையல் எண்ணெய் உற்பத்தியிலும் தன்னிறைவைப் பெறும் வகையில், பனை தோட்ட திட்டத்தை முழு அளவில் செயல்படுத்த, புகழ்பெற்ற பதஞ்சலி நிறுவனம் முடிவு செய்துள்ளது. 64 ஆயிரம் ஹெக்டேரில், பனை எண்ணெய் தோட்ட வர்த்தகத்தை சிறப்பாக செயல்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நாடு தழுவிய அளவில் 4 லட்சம் விவசாயிகள் பயன்பெறவும் இலக்கு நிர்ணயித்துள்ளதாக பதஞ்சலி நிறுவனம் தெரிவித்துள்ளது. 12 மாநில அரசுகளுடன் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த வர்த்தகத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் செய்யப்படும் முதலீடுகள், அடுத்த 7 முதல் 25 ஆண்டுகளில் பெருமளவு லாபம் கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளால் நாட்டில் சமையல் எண்ணெய் உற்பத்தியில் குறிப்பிட்ட பங்களிப்பை வழங்க முடியும் என்றும் பதஞ்சலி நிறுவனம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்