மாணவர்களுக்கு புதிய வகுப்பறை கட்டிடங்கள்...நன்றி தெரிவித்த பொதுமக்கள்...தந்தி டிவி செய்தி எதிரொலி

x

கள்ளக்குறிச்சி அருகே புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டது தொடர்பாக, தந்தி டிவிக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் வீ.மாமந்தூரில், பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து மாணவ மாணவிகள் காயமடைந்தனர். இதனையடுத்து பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டுமென்ற பொதுமக்களின் கோரிக்கை, தந்தி டிவியில் செய்தியாக வெளியானது. இதனைத்தொடர்ந்து கள்ளக்குறிச்சி எம்எல்ஏவின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, பள்ளிக்கு புதிதாக மூன்று வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டது. அதனை எம்எல்ஏ செந்தில்குமார் திறந்து வைத்த நிலையில், அவருக்கும், செய்தி வெளியிட்ட தந்தி டிவிக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்