செப்டம்பர் முதல் ஆந்திராவிற்கு புதிய தலைநகர்

x

வரும் செப்டம்பர் மாதம் முதல் ஆந்திராவின் தலைநகராக விசாகப்பட்டினம் செயல்படும் என அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் அறிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் காகுளம் மாவட்டத்தில் அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன், பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். பின்னர் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், நிர்வாகப் பரவலாக்கத்தின் ஒரு பகுதியாக, வருகிற செப்டம்பர் மாதம் முதல் விசாகப்பட்டினத்தில் இருந்து அரசு நிர்வாகம் மேற்கொள்ளப்படும் என்றார். செப்டம்பரில் இருந்து தானும் விசாகப்பட்டினத்திலேயே தங்கவுள்ளதாகவும் கூறிய ஜெகன்மோகன், விசாகப்பட்டினம் மாநிலத்தில் உள்ள அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நகரம் எனவும் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்