தொடர்ந்து 24 மணி நேரமும்.. வடமாநிலத்தவர் பாதுகாப்புக்காக புதிய செயலி | New App | North Indian | Salem

x
  • இந்த செயலி மூலமாக பாதுகாப்பில் இல்லை என்று வடமாநில தொழிலாளர்கள் பதிவு செய்தால், உடனடியாக காவல்துறையினர் சென்று உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • சேலம் நெத்திமேடு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநகர காவல் ஆணையர் விஜயகுமாரி, இந்த புதிய செயலியை அறிமுகம் செய்து வைத்தார்.
  • வடமாநில தொழிலாளர்கள், இந்த செயலியை பயன்படுத்துவது குறித்தும், விளக்கம் அளிக்கப்பட்டது.
  • இந்த செயலியை கண்காணிக்க தனிக்குழு அமைத்து காவல்துறையினர் 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் மாநகர காவல் ஆணையர் கூறியுள்ளார்.
  • இதனைத் தொடர்ந்து நெத்திமேடு பகுதியில், காவல் ஆணையர் விஜயகுமாரி சாலையில் நடந்து சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

Next Story

மேலும் செய்திகள்