சபரிமலையில் பக்தர்களுக்காக புதிய ஏர்போர்ட்

x

சபரிமலை விமான நிலையத்துக்கு 2 ஆயிரத்து 570 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த கேரள அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக விமான நிலையம் உருவாக்க திட்டமிட்ட கேரள அரசு, பல ஆண்டுகளுக்கு முன்பே அதற்கான பணிகளை துவக்கியது.

ஆனால், நிலம், உரிய துறைகளின் அனுமதி உள்ளிட்ட காரணங்களால் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள இயலாமல் இருந்து வந்தது.

இந்நிலையில், எருமேலி தெற்கு மற்றும் மணிமலையில் 2 ஆயிரத்து 570 ஏக்கர் நிலம் கையகப்படுத்த கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்