"விழுப்புரத்தை ஒருபோதும் மறக்க மாட்டேன்" - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நெகிழ்ச்சி

x

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள பணியிடங்களுக்கு தேர்வானவர்களுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பணி நியமன ஆணைகளை வழங்கினார். தியாகராய நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, அஞ்சல் துறை, ரயில்வே, சுகாதாரத்துறை உள்ளிட்ட துறைகளுக்கு தேர்வான 247 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். தொடர்ந்து பணி நியமன ஆணைகளைப் பெற்ற மாணவ மாணவிகளுடன் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடினார். அப்போது, நிர்மலா சீதாராமனுடன் மாணவிகள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். விழுப்புரத்தை சேர்ந்த ஒரு மாணவியிடம் பேசும் போது, விழுப்புரத்தை ஒரு போதும் மறக்க முடியாது என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்