நேபாளத்தில் கோர விமான விபத்து... விழுந்து நொறுங்கிய காட்சிகள்... அதிர்ச்சி தகவல்கள் | Flight Crash | Thanthi TV

x

நேபாளத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் கிட்டத்தட்ட 40 பேர் பலியாகி இருக்கக் கூடும் என அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேபாளத்தில் உள்ள பொக்ராவில் உள்நாட்டு விமான நிறுவனமான எட்டி ஏர்லைன்ஸின் விமானம் ஒன்று இன்று விபத்திற்குள்ளானது... காத்மாண்டுவில் இருந்து பொக்ராவுக்குச் சென்ற எட்டி ஏர்லைன்ஸின் ஏடிஆர் 72 விமானம் காஸ்கி மாவட்டத்தின் பொக்ராவில் விழுந்து நொறுங்கியது... 2 கைக்குழந்தைகள் உட்பட 53 நேபாள நாட்டவர்களுடன், 5 இந்தியர்கள், 4 ரஷ்யர்கள், அயர்லாந்தைச் சேர்ந்த ஒருவர், 2 கொரியர்கள், அர்ஜெண்டினாவைச் சேர்ந்த ஒருவர் மற்றும் பிரெஞ்சுக்காரர் விமானத்தில் பயணித்துள்ளனர். வானிலை திடீரென மாறி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்... இதில் 40 பேர் வரை உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அண்மையில் சீனாவின் உதவியுடன் கட்டப்பட்ட சர்வதேச விமான நிலையத்தில் விபத்து நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்