அசுரவேகத்தில் வந்த வேண் திடீரென தலைகீழாக கவிழ்ந்து விபத்து.. நெல்லையில் பரபரப்பு.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

x

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகே, வேகமாக சென்ற வேன், நிலைத்தடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

வாகைக்குளம் பகுதியைச் சேர்ந்த முருகன் மற்றும் அவரது உறவினர்கள் வேனில் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு சென்று திரும்பிய போது கங்கைகொண்டான் அருகே விபத்து ஏற்பட்டுள்ளது.

சாலையில் போலீஸ் தடுப்புகள் இருந்த நிலையில், அதனை வேகமாக கடக்க முயன்ற போது நிலைத்தடுமாறி வேன் சாலையில் கவிழ்ந்தது.

இதில் வேனில் இருந்த 11 பேர் காயமடைந்தனர்.

இதனிடையே இந்த விபத்தின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன...


Next Story

மேலும் செய்திகள்