TNPL Finalஇல் கோவையுடன் மோதும் நெல்லை...

x

டி.என்.பி.எல் தொடரின் குவாலிபையர் சுற்றில் நெல்லை மற்றும் திண்டுக்கல் அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த திண்டுக்கல் அணி, 185 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய நெல்லை அணியில், அஜிதேஷ் 73 ரன்கள் எடுத்தார். கடைசி 2 ஓவர்களில் நெல்லை அணி வெற்றி பெற 37 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 19வது ஓவரில் ரித்திக் ஈஸ்வரன் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசினார். இதன்மூலம் 20 ஒவர்களில் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற நெல்லை அணி, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நாளைய தினம் நடைபெறும் இறுதி போட்டியில் நெல்லை அணி, கோவை அணியை சந்திக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்