நெல்லை எஸ்பி-யை கைது செய்ய அதிரடி உத்தரவு

x

நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணனை கைது செய்து ஆஜர்படுத்தும்படி, தென் மண்டல ஐ.ஜி.-க்கு மாநில ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில், சிவந்திபட்டியைச் சேர்ந்த பரமானந்தம் என்ற பட்டியலினத்தைச் சேர்ந்தவரின் நிலம் ஆக்கிரமிக்கப்பட்ட புகாரின் அறிக்கையை தாக்கல் செய்ய நெல்லை எஸ்பி-க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இரண்டு முறை அவகாசம் வழங்கியும் ஆஜராகாத நிலையில், 30-ஆம் தேதி இறுதி வாய்ப்பாக ஆஜராகும்படி ஆணையம் உத்தரவிட்டபோதும், எஸ்.பி. ஆஜராகாமல், கூடுதல் எஸ்.பி. மாரிராஜன் என்பவரை அனுப்பினார்.

இதனால் அதிருப்தி அடைந்த ஆணையம், காவல் கண்காணிப்பாளர் சரவணனுக்கு 500 ரூபாய் அபராதம் விதித்தது. அவரை கைது செய்து ஆஜர்படுத்தும்படுத்தும்படி தென் மாண்டல ஐ.ஜி.-க்கு உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்