ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞர்... இடி தாக்கி பரிதாபமாக பலியான சோகம் - தந்தையை இழந்து பரிதவிக்கும் 4 குழந்தைகள்

x
  • நெல்லை மாவட்டம் அம்பையில் இடி தாக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
  • தோணித்துறை பகுதியைச் சேர்ந்தவர் சின்னராசு. ஓட்டுநரான இவருக்கு 3 பெண் குழந்தைகள் உட்பட 4 குழந்தைகள் உள்ளனர்.
  • இந்நிலையில், லேசான மழை பெய்து கொண்டிருந்த போது, சின்னராசு தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றுள்ளார்.
  • அப்போது, இடி தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
  • பின்னர், தகவலறிந்து வந்து உடலை மீட்ட போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்