"மனைவியை கடத்தி சிறை வைத்திருக்கிறார்கள்"... சீருடையில் வந்து புகார் மனு அளித்த காவலர் - நெல்லையில் பரபரப்பு

x
  • நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம் நடந்து வந்த நிலையில் போக்குவரத்து காவலரான ரவி ஆதித்யன் சீருடையில் வந்து மனு அளித்தார்.
  • தன்னுடைய மனைவி தென்காசிக்கு சென்ற நிலையில் பாஜகவில் சேர்ந்திருப்பதாகவும், அவரை சிலர் வேண்டுமென்றே சிறை வைத்திருப்பதாகவும் பேட்டி அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
  • இதனிடையே விடுமுறை என சொல்லிவிட்டு சென்ற காவலர் ரவி, பணிக்கு சேரவில்லை என்றும் அவரது மனைவியிடம் கேட்டபோது கணவருடன் வாழ விருப்பமில்லை என கூறியதாகவும் மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் தெரிவித்தார்.
  • சீருடையுடன் சென்று மனு அளித்தது தொடர்பாக துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் ஆணையர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்