டயாலிசிஸ்-க்காக அழைத்து சென்ற மருத்துவர்கள்.. திடீரென உயிரிழந்த பள்ளி ஆசிரியை - மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்

x
  • நெல்லையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியை திடீரென உயிரிழந்த விவகாரத்தில், ஆசிரியையின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பானது.
  • தூத்துக்குடியை சேர்ந்தவர் தனியார் பள்ளி ஆசிரியை பத்மபிரியா.
  • இவர் சீறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நிலையில், நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
  • அங்கு, தொடர்ந்து 5 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த பத்மபிரியாவை, டயாலிசிஸ் சிகிச்சைக்காக மருத்துவர்கள் அழைத்து சென்றுள்ளனர்.
  • அப்போது, திடீரென உடல் உபாதை ஏற்பட்டு ஆசிரியை உயிரிழந்ததாக கூறபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
  • இந்த சம்பவத்தில், மருத்துவர்கள் அலட்சியமாக செயல்பட்டதாக கூறி ஆசிரியையின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பானது.
  • தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஆசிரியையின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்