நெல்லையில் வடமாநில இளைஞரை பதறவைத்த 2 சிறுவர்கள்

x

உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த துர்கேஷ் என்பவர், நெல்லை மாவட்டம் வீரமாணிக்கபுரம் பகுதியில் தங்கியுள்ளார். இந்தநிலையில் அவரை வழிமறித்த சிலர், அவரிடமிருந்து 3 ஆயிரம் ரூபாய் பணம் உள்ளிட்டவற்றை பறித்து சென்றுள்ளனர். இதுதொடர்பாக துர்கேஷ் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், நெல்லை சந்திப்பு ரயில் நிலைய பகுதியில் இருந்த கொள்ளையர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர். கைதான 2 சிறார்கள் உட்பட 5 பேரும் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், ஐவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்