போதையில் பொதுமக்களிடம் அட்டகாசம்...தட்டி கேட்ட காவலரின் சட்டையை கிழித்த அவலம் - அதிர்ச்சி காட்சிகள்

x

நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்த பசுபதி என்பவர், மதுபோதையில் பணகுடி பஜாருக்கு வருவோரை அவதூறாக பேசி அட்டகாசம் செய்ததாக கூறப்படுகிறது.

தகவலறிந்து சென்ற காவலர் ஒருவர், பசுபதியை சத்தம் போட்டு அனுப்ப முயன்றுள்ளார்.

ஆனால் மது போதை தலைக்கேறிய அவர், காவலரின் சட்டையை பிடித்து இழுத்துள்ளார்.

இந்த சம்பவத்தின் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்