செல்போனில் கேம்.. கண்டித்த பெற்றோர் - சிறுவன் எடுத்த விபரீத முடிவு

x
  • நெல்லை மாவட்டம் பணகுடி அண்ணா நகரை சேர்ந்த சொரிமுத்து, செங்கல்சூளையில் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
  • இவருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
  • இரண்டு மகளுக்கும் திருமணமான நிலையில், மகன் வசந்தகுமார், 8ம் வகுப்பு வரை படித்துவிட்டு பள்ளிக்குச் செல்லாமல், செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்ததால் அதனை பெற்றோர் கண்டித்துள்ளனர்.
  • இந்நிலையில், வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு சாப்பிட வந்த சொரிமுத்து, வசந்தகுமார் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்ததை கண்டு மீண்டும் எச்சரித்துள்ளார்.
  • இதனால் ஆத்திரமடைந்த வசந்தகுமார், வீட்டின் அருகில் இருந்த அரளிச்செடியில் காய்களை பறித்து அரைத்து குடித்துள்ளான்.
  • பின்னர் ஆபத்தான நிலையில் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் வசந்தகுமார் உயிரிழந்தான்.
  • இந்த சம்பவம் குறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்