கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம்.. காத்திருப்போர் பட்டியலில் 'பல்'வீர் சிங்.. தூத்துக்குடி எஸ்.பிக்கு கூடுதல் பொறுப்பு.!

x
  • நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில், காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களின் பற்கள் பிடுங்கப்பட்டதாக புகார் எழுந்தது.
  • இதில் குற்றச்சாட்டுக்குள்ளான ஏ.எஸ்.பி பல்வீர் சிங், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
  • இந்தநிலையில் நெல்லை மாவட்ட போலீஸ் எஸ்.பி சரவணன், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
  • தூத்துக்குடி மாவட்ட எஸ்.பியான பாலாஜி சரவணன் நெல்லை மாவட்டத்தை கூடுதலாக கவனித்துக் கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தை தேசிய மற்றும் மாநில மனித உரிமை ஆணையங்கள் விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்