"மருத்துவ செலவுக்கு பணம் வேணும்" - வியாபாரிகளை நேக்காக ஏமாற்றிய வட மாநில இளைஞர்கள் | mayiladuthurai

x

மயிலாடுதுறையில் தங்கம் என கூறி குண்டுமணி மாலைகளை விற்று ஏமாற்றிய வட மாநிலத்தை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர். கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்தவர்கள் தேவூ மற்றும் ராஜிவ். இவர்கள் இருவரும் மயிலாடுதுறை பகுதிகளில் உள்ள வணிகர்களிடத்தில், குண்டுமணி மாலைகளை தங்கம் என கூறி மோசடி செய்ததாக போலீசில் புகாரளிக்கப்பட்டது. விசாரணையில், குடும்ப உறுப்பினர்களின் மருத்துவ செலவிற்கு பணம் தேவை என கூறி குண்டு மணி மாலைகளை தங்கம் என விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, போலீசாரால் தேடப்பட்டு வந்த இருவரும் வெளியூருக்கு தப்பி செல்ல முயன்ற போது ரயில் நிலையத்தில் வைத்து சிக்கியுள்ளனர். இந்நிலையில், இருவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்