6 ஆண்டுகளுக்கு முன்பே திருமண பதிவு பரவிய தகவல்...நயன், விக்கி எந்த ஒரு விளக்கமும் அளிக்கவில்லை

x

6 ஆண்டுகளுக்கு முன்பே திருமண பதிவு பரவிய தகவல்...நயன், விக்கி எந்த ஒரு விளக்கமும் அளிக்கவில்லை - சுகாதாரத்துறை

சர்ச்சைக்குரிய வகையில் இரட்டைக் குழந்தைகளை பெற்ற விவகாரம் தொடர்பாக, சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் தம்பதி சார்பில் வழக்கறிஞர்கள் மூலமாக விரிவான விளக்கம் வழங்கப்பட்டிருப்பதாகவும், குறிப்பாக ஆறு ஆண்டுகளுக்கு முன்னதாகவே பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல் வெளியாகியது. மேலும், ART சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்னதாகவே கடந்த டிசம்பர் மாதத்தில் வாடகை தாய் சிகிச்சைக்காக பதிவு செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. குறிப்பாக சட்டத்திற்கு புறம்பாக எந்த ஒரு செயலிலும் இத்தம்பதி ஈடுபடவில்லை என கூறப்பட்டது. இந்த நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள சுகாதாரத்துறை, நயன் மற்றும் விக்கி தம்பதிகளின் சார்பில், இதுவரை எந்த ஒரு விளக்கமும் அளிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்